ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஊதியம் முழுவதையும் தொகுதிக்கே செலவு செய்ய நியமன எம்.எல்.ஏ. முடிவு

புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதியில் தனது ஊதியம் முழுவதையும் பொதுமக்கள் நலனுக்காகச் செலவிட நியமன எம்.எல்.ஏ.வும், பாஜக மாநிலத் தலைவருமான வி.சாமிநாதன் முடிவு செய்துள்ளார்.

Updated On :8 அக்டோபர் 2018, 9:27 am IST

புதுச்சேரி லாசுப்பேட்டை தொகுதியில் தனது ஊதியம் முழுவதையும் பொதுமக்கள் நலனுக்காகச் செலவிட நியமன எம்.எல்.ஏ.வும், பாஜக மாநிலத் தலைவருமான வி.சாமிநாதன் முடிவு செய்துள்ளார்.
 புதுவையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே, நியமன எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கும் ஒரு வழியாக ஊதியம் வழங்கப்பட்டது. இந்த ஊதியத்தை முழுவதுமாக லாசுப்பேட்டை தொகுதிக்கே செலவிட மாநில பாஜக தலைவர் சாமிநாதன் முடிவு செய்துள்ளார்.
 இதற்காக ஆசிரியர்கள் 4 பேர், தையல் ஆசிரியர், எலக்ட்ரீசியன், பிளம்பர், வேன் ஓட்டுநர் என 8 பேரை ஊதியம் தந்து வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
 லாசுப்பேட்டை தொகுதி பாஜக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், எலக்ட்ரீசியன், பிளம்பர் ஆகியோர் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று கூலி எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மின்சாரம், பிளம்பிங் சம்பந்தப்பட்ட வேலைகளை இலவசமாக செய்து தருவர்.
 தேவைப்படும் பொருள்களை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் வாங்கித் தர வேண்டும்.
 மேலும், லாசுப்பேட்டை, பெத்துசெட்டிப்பேட்டை, மடுவுப்பேட்டை, ஜீவானந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள பாஜகவினரின் வீடுகளில் இலவசக் கல்வி பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்துவர்.
 அதுபோல, பெத்துசெட்டிப்பேட்டையில் தையல் பயிற்சி மையம் திறக்கப்பட்டு, பெண்களுக்கு தையல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
 லாசுப்பேட்டை தொகுதி மக்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு இலவச வேன் சேவையும் அளிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வேனை பயன்படுத்திக் கொள்ளலாம். வேன் ஓட்டுநருக்கு ஊதியம் தரத் தேவையில்லை. டீசலை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
 இதுபோல, நியமன எம்.எல்.ஏ. பதவிக்காக வழங்கப்படும் ஊதியம் முழுவதையும் தனது லாசுப்பேட்டை தொகுதிக்கே சாமிநாதன் செலவிட முடிவு செய்துள்ளதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.