எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் சட்ட விரோத பணி நியமனம்

சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் சட்ட விரோதமாக பணி நியமனம் செய்யப்படுவதாக புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழக தினக்கூலி ஊழியர்கள் நலச் சங்கம் குற்றஞ்சாட்டியது.

Updated On :22 அக்டோபர் 2018, 4:30 am

சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் சட்ட விரோதமாக பணி நியமனம் செய்யப்படுவதாக புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழக தினக்கூலி ஊழியர்கள் நலச் சங்கம் குற்றஞ்சாட்டியது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் வெளியிட்ட அறிக்கை:
புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் 4 ஆண்டுகளாகப் பணிபுரிந்த 200 ஊழியர்கள் கடந்த 2016 -ஆம் ஆண்டில் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர். 
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு, பொதுநல வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அண்மையில் 3 மாதம் முதல் 6 மாதம் வரை இலவசமாக, தன்னார்வமாக ஊதியமின்றி பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்தது. 
இது கொல்லைப்புறமாக ஆள்களைப் பணி அமர்த்தும் செயலாகும். ஏற்கெனவே, பணி செய்த ஊழியர்களுக்கு 10 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாத நிலையில், தற்போது இலவசமாகப் பணி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்ததை ஏற்க முடியாது. 
கடந்த 2016- ஆம் ஆண்டில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், படகு சவாரியின் போது சுமார் 17 வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் விழுந்து இறந்துள்ளனர். நல்ல லாபம் ஈட்ட வேண்டிய படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்த ஊழியர்களை தடாலடியாக நிறுத்திவிட்டு சட்டத்தையும், நீதிமன்றத்தையும் ஏமாற்ற சுற்றுலா வளர்ச்சிக் கழகம் விடுத்துள்ள பொது அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே வேலையிழந்த தினக்கூலி பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். 
இதுதொடர்பாக, துணைநிலை ஆளுநரும், முதல்வரும் பணியமர்த்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.