புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதைத் தடுப்பது தொடர்பாக அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.சிவா மின் துறை அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
உருளையன்பேட்டை தொகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. இரா.சிவாவிடம் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையத்தில் உள்ள மின் துறைத் தலைமை அலுவலகத்தில் துறை அதிகாரிகளுடன் சிவா எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மின் பொறியாளர்கள் கோபாலகிருஷ்ணன், சீனுவாசன், ரமேஷ் மற்றும் மின் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, தொடர் மின் தடை பிரச்சைனயைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மின் தடைக்கான காரணம் குறித்தும் ஆராயப்பட்டது. மின் தடை பிரச்னையை நிரந்தரமாக போக்க புதிதாக 3 மின் வழித் தடங்கள் அமைக்கவும், உயர்மின் அழுத்த மின் மாற்றிகள் அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!
தில்லி - என்சிஆா் பகுதியில் தாக்குதல், படுகொலைக்கு திட்டமிட்டதாக இரு ஐஎஸ்ஐ முகவா்கள் கைது

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஷாபாஸ் ஷெரீஃப், அசீம் முனீா் பரிந்துரை!

தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

