புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை சமுதாய ஒற்றுமை விழாவாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், ஆலோசனைக் கூட்டம் சாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் பேரவைத் தலைவர் குமரகுரு தலைமை வகித்தார். பொதுச் செயலர் சனில்குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் துணைத் தலைவர்கள் செ.குமரகுரு, பசுபதி, நாகமணி, கேசவலு, ஸ்ரீதர் உள்பட 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாக் குழுப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் செப். 13-ஆம் தேதி சாரம் அவ்வைத் திடலில் 25 அடி உயர விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, சிறப்பான பூஜைகளுடன் இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புத் தலைவர்களை அழைத்து விழாவை சமுதாய ஒற்றுமை விழாவாகக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

