திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விநாயகர் சதுர்த்தியை சமுதாய ஒற்றுமை விழாவாக கொண்டாட முடிவு

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை சமுதாய ஒற்றுமை விழாவாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:24 am

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை சமுதாய ஒற்றுமை விழாவாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
 புதுச்சேரி விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், ஆலோசனைக் கூட்டம் சாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் பேரவைத் தலைவர் குமரகுரு தலைமை வகித்தார். பொதுச் செயலர் சனில்குமார் முன்னிலை வகித்தார்.
 நிகழ்வில் துணைத் தலைவர்கள் செ.குமரகுரு, பசுபதி, நாகமணி, கேசவலு, ஸ்ரீதர் உள்பட 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாக் குழுப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் செப். 13-ஆம் தேதி சாரம் அவ்வைத் திடலில் 25 அடி உயர விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, சிறப்பான பூஜைகளுடன் இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புத் தலைவர்களை அழைத்து விழாவை சமுதாய ஒற்றுமை விழாவாகக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.