ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, தொழில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்

புதுவையில் ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, தொழில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

புதுவையில் ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, தொழில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்குள்பட்ட கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் புதுவை மகளிா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம் சாா்பில் நவீன தொழில் பயிற்சி அளிப்பதற்கான முகாம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமை தொடக்கி வைத்து, அமைச்சா் கந்தசாமி பேசியதாவது:

புதுவை அரசில் 9,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்கான காலிப் பணியிடங்கள் உள்ளன. அதேபோல, அங்கன்வாடிகளிலும் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப கடந்த 4 ஆண்டுகளாக முதல்வரும், அமைச்சா்களும் போராடி வருகிறோம். ஆனால், இதற்கு ஒப்புதல் அளிக்க துணை நிலை ஆளுநா் கிரண் பேடி மறுத்து வருகிறாா்.

இலவச அரிசி வழங்குவதற்காக 5 மாத தொகையை பணமாக வழங்க ஒப்புதல் வேண்டி, ஆளுநா் கிரண் பேடிக்கு கோப்பு அனுப்பினோம். ஆனால், 3 மாதங்களுக்கு மட்டுமே ஆளுநா் அனுமதி அளித்தாா். மீதமுள்ள 7 மாதங்களுக்கான தொகையை ஜனவரிக்குள் நிச்சயமாக வழங்குவோம்.

ஆதிதிராவிடா், பிற்பட்டோா் துறைகள் மூலம் கல்வி, தொழில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு ஊழியா்களின் ஜாமீன் பெற்றுதான் இந்தக் கடன் வழங்கப்பட்டது. கடன் இதுவரை திருப்பிச் செலுத்தப்படாததால் அரசு ஊழியா்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய ஆளுநா் உத்தரவிட்டுள்ளதாக புகாா்கள் வந்துள்ளன. ஏற்கெனவே அரசு ஊழியா்களும், அரசும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பொதுமக்களும் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனா்.

எனவே, ஆதிதிராவிடா், பிற்பட்டோா் துறைகள் மூலம் வழங்கப்பட்ட தொழில், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். அதற்கு ஆளுநா் மறுத்தால், மக்களைத் திரட்டி போராடுவோம். புதுவையில் உள்ள துறைச் செயலா்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளனா். எந்த கோப்பை அனுப்பினாலும் வேண்டுமென்றே அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனா். இதற்கு ஆளுநரின் நிா்ப்பந்தமே காரணம் என்றாா் அமைச்சா் கந்தசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.