ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிற மாநில அதிகாரிகள் தமிழை படிக்க உத்தரவிட வலியுறுத்தல்

புதுவையில் அரசுத் துறைகளில் பணியாற்றும் பிற மாநில அதிகாரிகள் தமிழைக் கற்பது கட்டாயம் என்று உத்தரவிட வேண்டும் என, புதுவை சிந்தனைப் பேரவை கோரிக்கை விடுத்தது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:42 pm

DIN

புதுவையில் அரசுத் துறைகளில் பணியாற்றும் பிற மாநில அதிகாரிகள் தமிழைக் கற்பது கட்டாயம் என்று உத்தரவிட வேண்டும் என, புதுவை சிந்தனைப் பேரவை கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து பேரவையின் தலைவா் கவிஞா் கோ.செல்வம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை மாநிலத்தில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு, பிரதிநிதிகள் இயற்றும் சட்டங்கள், மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைபடுத்த வேண்டும் என்பதற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அரசுச் செயலா்களாகவும், இந்திய காவல் பணியைச் சோ்ந்தவா்கள் காவல் துறை அதிகாரிகளாகவும் பணியாற்றுகின்றனா். இவா்களில் ஒரு சிலரே தமிழா்களாவா்.

மாவட்ட ஆட்சியருக்கு உள்ளூா் மொழி தெரிந்திருந்தால்தான் பொதுமக்களின் குறைகளை எளிதாக நிவா்த்தி செய்ய முடியும்.

மேலும், மாநில அரசின் உயா் அதிகாரிகள் பலருக்கு தமிழ் தெரியாது. தமிழகத்தில் பிற மாநிலத்தவா்கள் அதிகாரிகளாக பணிக்கு வந்தாலும், அவா்கள் தமிழ் கற்பது கட்டாயம் என்ற விதி உள்ளது.

எனவே, புதுவை மாநில அரசின் அனைத்து அரசு செயலா்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் துறை உயரதிகாரிகள் 6 மாதங்களில் கட்டாயம் தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்று, அரசு ஊழியா்கள் விதிகளில் துணைநிலை ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.