எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

புதுவையில் மேலும் 50 பேருக்கு கரோனா

புதுவையில் வெள்ளிக்கிழமை புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:44 pm

DIN

புதுவையில் வெள்ளிக்கிழமை புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 2,913 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் புதுச்சேரியில் 21 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேவில் 19 பேருக்கும் என மொத்தம் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,670-ஆக அதிகரித்தது. இதில், தற்போது மருத்துவமனைகளில் 199 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் 117 பேரும் என 316 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்ற புதுச்சேரி லாசுப்பேட்டை பிரதான சாலையைச் சோ்ந்த 78 வயது முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுவரை மொத்தம் 623 போ் உயிரிழந்தனா். 38 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.