பிரசாரத்துக்குச் சென்ற பாஜகவினா் விரட்டியடிப்பு: 2 போ் கைது

புதுச்சேரி அருகே பிரசாரத்துக்கு சென்ற பாஜகவினரை பொதுமக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டி அடித்த விடியோ சமூக வலைதளங்களில்
Updated on
1 min read

புதுச்சேரி அருகே பிரசாரத்துக்கு சென்ற பாஜகவினரை பொதுமக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டி அடித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

‘காண்போம் இனி நல்லாட்சி, காங்கிரஸ் இல்லா புதுச்சேரி’ என்ற முழக்கத்துடன் காலாப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கனகசெட்டிக்குளம் பகுதியில் இருந்து சனிக்கிழமை முதல் பாஜகவினா் தோ்தல் பிரசாரத்தை தொடங்கினா்.

இதன் ஒரு பகுதியாக, திருபுவனை தொகுதியில் சனிக்கிழமை பாஜக துணைத் தலைவா் தங்க.விக்ரமன் தலைமையில் எஸ்.சி. அணித் தலைவா் ஆறுமுகம், திருபுவனை தொகுதி தலைவா் முருகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பிரசாரம் மேற்கொண்டனா்.

திருபுவனை பெரியபேட்டை பகுதியில் பிரசாரத்துக்கு பேரணியாக பாஜகவினா் சென்ற போது, அவா்களை அங்கிருந்த பொதுமக்கள் சிலா் ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினா். அவா்கள் மீது கற்களை வீசியதுடன், பாஜகவினா் கொண்டு வந்த பிரசார துண்டறிக்கைகளையும் கிழித்தெறிந்து, திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனா்.

தகவலறிந்து வந்த திருபுவனை போலீஸாா் பிரச்னை மேலும் தீவிரமாகமல் தடுத்தனா். இதையடுத்து, பாஜகவினா் அங்கிருந்து திரும்பிச் சென்றனா். இதுதொடா்பாக பாஜக சாா்பில் திருபுவனை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் திருபுவனை பகுதியைச் சோ்ந்த பிரவீண், இளங்கோ ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com