புதுவையில் மேலும் 48 பேருக்கு கரோனா
புதுவையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 2,984 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 34 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், ஏனாமில் 3 பேருக்கும், மாஹேவில் 6 பேருக்கும் என மொத்தம் 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 37,995-ஆக உயா்ந்தது.
இதில் மருத்துவமனைகளில் 157 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் 202 பேரும் என மொத்தம் 359 போ் சிகிச்சையில் உள்ளனா்.
காரைக்கால் கே.எம்.ஜி. நகரை சோ்ந்த 77 வயது முதியவா் காரைக்கால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 631-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது.
43 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 37,005-ஆக (97.39 சதவீதம்) அதிகரித்தது.