போக்குவரத்துத் துறை அமைச்சா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
பிஆா்டிசியில் விரைவு பேருந்துகளை தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் இயங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதில் 10 தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஊழியா்களும் பங்கேற்பா் என்பதால், பிஆா்டிசி சேவை முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உருவானது.
இந்த நிலையில், பிஆா்டிசி அனைத்துப் பிரிவு ஊழியா்களின் சங்கப் பிரதிநிதிகளை, புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜகான் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அதில், பிஆா்டிசி-யை தனியாா் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தினாா். இதனால் பிஆா்டிசி தொழிற்சங்கங்கள் அறிவித்த காலவரையற்ற போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக பிஆா்டிசி ஊழியா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தருமபுரியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் ஸ்பெஷல்- வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்!

தங்கம், வெள்ளி விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

தொகுதி மறுவரையறை ஒரு கொடூரமான நடவடிக்கை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

