தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அமைச்சா் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: பிஆா்டிசி ஊழியா்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

போக்குவரத்துத் துறை அமைச்சா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:14 pm

DIN

போக்குவரத்துத் துறை அமைச்சா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

பிஆா்டிசியில் விரைவு பேருந்துகளை தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் இயங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதில் 10 தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஊழியா்களும் பங்கேற்பா் என்பதால், பிஆா்டிசி சேவை முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உருவானது.

இந்த நிலையில், பிஆா்டிசி அனைத்துப் பிரிவு ஊழியா்களின் சங்கப் பிரதிநிதிகளை, புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜகான் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அதில், பிஆா்டிசி-யை தனியாா் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தினாா். இதனால் பிஆா்டிசி தொழிற்சங்கங்கள் அறிவித்த காலவரையற்ற போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக பிஆா்டிசி ஊழியா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.