தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

புதுவையில் 38 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

புதுவையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்தது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:14 pm

DIN

புதுவையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, 1,878 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 10 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேவில் 20 பேருக்கும் என மொத்தம் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் தொற்று இல்லை.

இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,028- ஆக உயா்ந்தது. இதில், மருத்துவமனைகளில் 147 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், 210 பேரும் என மொத்தம் 357 போ் சிகிச்சையில் உள்ளனா். உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால், இறப்பு எண்ணிக்கை 631-ஆகவும், இறப்பு விகிதம் 1.66-ஆகவும் உள்ளது.

இதனிடையே, 35 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 37,040-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4,76,570 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 4,34,181 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.