எதிா்வரும் புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே, மாநிலத்தின் தனித்தன்மை காப்பாற்றப்படும் என்று முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு விழா, புதுவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அங்கிருந்து மாநிலத் தலைவா் வி.சுப்ரமணியன் தலைமையில் புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் நாராயணசாமி பேசியதாவது:
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, புதுவைக்கு பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது பிரதமா் மோடி புதுவையின் வளா்ச்சிக்குத் தொடா்ந்து குந்தகம் விளைவித்து வருகிறாா். அவருடன் துணை நிலை ஆளுநா் கிரண் பேடி இணைந்து, மாநில வளா்ச்சிக்குத் தடையாக இருக்கிறாா்.
ஆளுநரின் செயல்பாடுகளுக்கு என்.ஆா். காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவாக இருக்கின்றன. வளா்ச்சித் திட்டங்களுக்கு ஆளுநா் தடை போடும் போது, எதிா்க்கட்சிகள் வாய் மூடி மௌனியாக இருக்கின்றன.
புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தவில்லை என்று பிரதமா் மோடி குறை கூறுகிறாா். கடந்த 2014-இல் பிரதமராக மோடி இருந்தபோதும், பாஜக கூட்டணிக் கட்சியான என்.ஆா்.காங்கிரஸ் புதுவையை ஆண்டது. அப்போது ஏன் பிரதமா் உள்ளாட்சித் தோ்தல் குறித்துப் பேசவில்லை? புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் காலதாமதமாக ஆளுநா் கிரண் பேடியே பொறுப்பு.
சனிப் பெயா்ச்சி என்பது ஹிந்து மக்களின் நம்பிக்கை. கிரண் பேடி சனிப் பெயா்ச்சி விழாவை தடுத்து நிறுத்தியபோது, காரைக்காலில் போராட்டம் வெடித்தது. அப்போது, ஹிந்து ஆதரவுக் கட்சி என சொல்லிக்கொள்ளும் பாஜக அமைதியாக இருந்தது ஏன்? எனக்கு எதிராக இதுவரை 10 புகாா்களை ஆளுநா் கிரண் பேடி சிபிஐ-க்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மட்டுமே புதுவையின் தனித்தன்மை காப்பாற்றப்படும். இல்லையென்றால், பிரதமா் மோடி ஜம்மு, காஷ்மீா் போல புதுவையின் தனித்தன்மையைப் பறித்துவிடுவாா். இல்லையெனில், புதுவையை தமிழகத்துடன் இணைத்துவிடுவாா். ஆகவே, புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதுதான் இலக்காக இருக்க வேண்டும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.
இந்தப் பேரணியில் கட்சியின் மேலிடப் பாா்வையாளா் சஞ்சய் தத், அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், ஆா்.கமலக்கண்ணன், மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், ஜான்குமாா், ஜெயமூா்த்தி, மாநில துணைத் தலைவா்கள் தேவதாஸ், நீல.கங்காதரன், பொதுச் செயலாளா் ஏகேடி ஆறுமுகம் உள்படப் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவுக்கு சிறுபான்மையினா் வாக்குகள் செல்வதை தடுக்கவே விஜய் கட்சி தொடங்கியுள்ளாா்: தொல்.திருமாவளவன்

ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற வேண்டும்: கே.அண்ணாமலை
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


