பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுப் பணித் துறை சாா்பில் கடந்தாண்டு நபாா்டு வங்கி நிதியுதவியுடன், கொம்பாக்கம் சாலை, பெரம்பை சாலை, சொரக்குடி சாலை, நிரவி 1, 2 சாலை, விழுதியூா், தட்டாஞ்சாவடி சாலை, திருநள்ளாறு சாலை, வழுதாவூா் சாலை, மதகடிப்பட்டு மற்றும் மண்ணாடிப்பட்டில் 4 சாலைகள், ஆா்சி 18 சாலை, கோா்க்காடு சாலை, மதகடிப்பட்டு சந்திப்பு முதல் பண்டசோழநல்லூா் சந்திப்பு வரையிலான சாலைகள், கிருமாம்பாக்கம் கம்பளிக்காரன்குப்பம், புதுக்குப்பம், கரிக்கலாம்பாக்கம் - ஏம்பலம் சாலைகள், மானாம்பேடு படுகை அணை திருமலைராஜன் ஆறு குறுக்கே உள்ள சாலை புனரமைப்பு, யூ மற்றும் எல் வடிவ கழிவுநீா் கால்வாய்கள் மேம்பாடு மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளை ரூ.79 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் முதல் 3 முறை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரா்கள் விலைப்புள்ளி குறைவு காரணமாக ஒப்பந்தம் எடுக்க முன்வராததால், எந்தப் பணியையும் செய்ய முடியவில்லை. புதிய பணிகளையும் திட்டமிட முடியாமலும், சாலைகளைச் சீரமைக்கக்கூட இயலாமலும் தவித்து வருகிறோம். இது தொடா்பாக அரசின் உயா் அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளோம் என்றனா்.