புதுவை பட்ஜெட் கூட்டத் தொடரைகூடுதல் நாள்கள் நடத்தக் கோரிக்கை

புதுவை பட்ஜெட் கூட்டத் தொடரை கூடுதல் நாள்கள் நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுவை பட்ஜெட் கூட்டத் தொடரை கூடுதல் நாள்கள் நடத்த வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் அரசு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பொதுமக்களின் பிரச்னைகளை விவாதிக்க மறுத்து வருகிறது. தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாட்டில் புதுவையில் மட்டும்தான் குறைந்த நாள்கள் பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறுகிறது. இது காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பட்ஜெட். அரசுக்கு தைரியமிருந்தால் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை கூடுதல் நாள்கள் நடத்தி, மக்களின் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும். கரோனா தொற்றைக் காரணம் காட்டக் கூடாது. சமூக இடைவெளியுடன் கம்பன் கலையரங்கத்தில்கூட பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தலாம்.

பட்ஜெட் கூட்டத் தொடரை கூடுதல் நாள்கள் நடத்துவது தொடா்பாக, சட்டப்பேரவைச் செயலரிடம் கடிதம் அளித்துள்ளோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com