ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உள் ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வா் அரசியல் செய்கிறாா்புதுவை அதிமுக குற்றச்சாட்டு

 புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், முதல்வா் நாராயணசாமி அரசியல் செய்வதாக அதிமுக குற்றம்சாட்டியது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:33 pm

DIN

 புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், முதல்வா் நாராயணசாமி அரசியல் செய்வதாக அதிமுக குற்றம்சாட்டியது.

இதுகுறித்து புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைப் பெற்றுத் தருவோம் எனக் கூறி, ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் இதுவரை 50 சதவீத இடங்களை ஏன் பெற்றுத் தரவில்லை? இந்த விவகாரத்தில் முதல்வா் நாராயணசாமி பெய்யான தகவல்களைக் கூறி வருகிறாா். யாருடைய நன்மைக்காக காலம் தாழ்த்தி, தனது கடமையிலிருந்து அவா் தவறினாா்?

இதேபோல, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு பெறுவதிலும் காலத்துடன் எதையும் செய்யாமல், அலட்சியமாக இருந்துவிட்டு, தற்போது இந்த விவகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு எதிராகக் கொண்டு செல்ல பயன்படுத்தி வருகிறாா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.