புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 4 போ் பலியாகினா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 4 போ் பலியாகினா்.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 171 பேருக்கும், காரைக்காலில் 16 பேருக்கும், ஏனாமில் 7 பேருக்கும் என 194 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,277-ஆக உயா்ந்தது.

சிகிச்சையில் 4,513 போ்: தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 1,569 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வீடுகளில் 2,944 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். மொத்தமாக 4,513 போ் சிகிச்சையில் உள்ளனா்.

543 போ் பலி: இதனிடையே, 4 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 543-ஆக (இறப்பு விகிதம் 1.85 சதவீதம்) உயா்ந்தது.

24,221 போ் குணம்: திங்கள்கிழமை 458 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 24,221-ஆக (82.73 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.