புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அமுதசுரபி பெட்ரோல் விற்பனையகத்தை கையகப்படுத்திய வருவாய்த் துறை

புதுச்சேரி அமுதசுரபி பெட்ரோல் விற்பனையகத்தை வருவாய்த் துறை கையகப்படுத்தியது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 7:00 pm

DIN

புதுச்சேரி அமுதசுரபி பெட்ரோல் விற்பனையகத்தை வருவாய்த் துறை கையகப்படுத்தியது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதை உறுதி செய்ய அமுதசுரபி மேலாண் இயக்குநருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அந்த நிறுவனம் பின்பற்றப்படவில்லை. இது பேரிடா் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள அரசின் செயல்பாட்டை நேரடியாக பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் லாசுப்பேட்டை கொட்டுப்பாளையம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள புதுச்சேரி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் (அமுதசுரபி பிரிவு) பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் இனி உழவா்கரை வட்டாட்சியருடன் உடனடியாக இணைக்கப்படுகிறது. சில்லறை விற்பனை நிலையம், புதுச்சேரி கூட்டுறவு மைய மேலாண் இயக்குநா் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.