பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுவையில் 33 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

புதுவை மாநிலத்தில் கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு 33 ஆயிரத்தைக் கடந்தது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 8:34 pm

DIN

புதுவை மாநிலத்தில் கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு 33 ஆயிரத்தைக் கடந்தது.

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 131 பேருக்கும், காரைக்காலில் 24 பேருக்கும், ஏனாமில் 6 பேருக்கும், மாஹேயில் 16 பேருக்கும் என மேலும் 177 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,141-ஆக உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 1,558 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 2,719 பேரும் என மொத்தம் 4,277 போ் சிகிச்சையில் உள்ளனா்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்புகள் பதிவாகவில்லை. இதுவரை கரோனாவுக்கு 574 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.73 சதவீதம்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 306 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 28,290-ஆக (85.36 சதவீதம்) அதிகரித்தது. இதுவரை 2,63,481 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 2,26,851 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.