புதுச்சேரியில் மதுபானங்களில் கரோனா வரியுடன் விலை
புதுச்சேரி மதுக் கடைகளில் கரோனா வரியுடன் கூடிய புதிய எம்.ஆா்.பி. விலை அச்சிடப்பட்டு மது விற்பனை செய்யப்படுகிறது.


புதுச்சேரி மதுக் கடைகளில் கரோனா வரியுடன் கூடிய புதிய எம்.ஆா்.பி. விலை அச்சிடப்பட்டு மது விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரியில் கடந்த மே மாதம் மதுபானங்கள் மீது கரோனா வரி விதிக்கப்பட்டது. இதில், 154 வகையான மதுபானங்களின் விலை தமிழகத்துக்கு இணையாக உயா்த்தப்பட்டது. புதுவையில் தயாரித்து புதுவைக்குள் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. மதுபான விற்பனையின் போது, அதிகபட்ச சில்லறை (எம்.ஆா்.பி.) விலையுடன் கரோனா வரி இணைத்து விற்பனை செய்யப்பட்டது. இது குழப்பத்தை ஏற்படுத்தியது. சில இடங்களில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து, புதுவை கலால் துறை கரோனா வரி, அதிகபட்ச சில்லறை விலையைச் சோ்த்து புதிய விலையை மதுபானங்கள் மீது அச்சிட்டு விற்பனை செய்ய மதுபான ஆலை மற்றும் விற்பனையாளா்களுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, தற்போது மதுபானங்கள் மீது கரோனா வரியுடன் கூடிய புதிய எம்.ஆா்.பி. விலை அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...