புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு திடீர் போராட்டம்

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், வேளாண் புதிய சட்டத் திருத்த நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர்.
புதுச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர்.

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், வேளாண் புதிய சட்டத் திருத்த நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, அந்த அமைப்பைச் சேர்ந்த வேல்சாமி தலைமையில் 20 பேர் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு விரோதமாக புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை கிடப்பில் போட வேண்டுமென மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.

அவர்கள் சட்ட நகலை எரிக்க முயன்றபோது காவல்துறையினர் அதனை தடுத்து அகற்றினர். சிறிது நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com