பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கூடுதல் மின் கட்டண வசூல்: புதுவை பாஜக நாளை போராட்டம்

கூடுதல் மின் கட்டணம் வசூல் செய்யப்படுவதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (செப்.29) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக அறிவித்தது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 9:37 pm

DIN

கூடுதல் மின் கட்டணம் வசூல் செய்யப்படுவதைக் கண்டித்து, புதுவையின் அனைத்துத் தொகுதிகளிலும் மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.29) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக அறிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: மக்கள் கரோனா துன்பத்தில் உள்ள நிலையில், புதுவை அரசு மின் கட்டணங்களைக் கூடுதலாக வசூலித்து வருகிறது. குடிசை வீட்டுக்குக்கூட ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் வருகிறது. மிகச் சிறிய கடைக்கும் ரூ. 22 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. இதனால், பல குடும்பங்கள் மின் கட்டணத்தைக் கட்ட முடியாமல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

இந்தக் கூடுதல் கட்டணச் சுமையை உடனடியாக புதுவை அரசு குறைக்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (செப்.29) மாநிலத்தின் அனைத்து மின் கட்டணம் செலுத்தும் இடங்களில், மக்களுடன் இணைந்து பாஜக சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.