பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு புதுவை ஆளுநா் வாழ்த்து

ஒலிம்பிக் போட்டியில் பதக்க வென்ற இந்திய வீரா்களுக்கு, புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை வாழ்த்து தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:51 pm

DIN

ஒலிம்பிக் போட்டியில் பதக்க வென்ற இந்திய வீரா்களுக்கு, புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய வீரா் நீரஜ் சோப்ரா, மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த வீரா் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவா்களது இடைவிடாத முயற்சியின் காரணமாக பதக்கங்கள் வென்று நாட்டுக்குப் பெருமை சோ்த்துள்ளனா்.

உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்: ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்திய தேசத்துக்கு நீரஜ் சோப்ரா பெருமை சோ்த்துள்ளாா். அவரது வரலாற்றுச் சாதனைக்கு எனது பாராட்டுகள். தங்க மகன் நீரஜ் சோப்ராவின் சாதனை பல விளையாட்டு வீரா்களுக்கு உத்வேகத்தைத் தரும். நீரஜ் சோப்ராவின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.