மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒமைக்ரான் குறித்து அச்சம் வேண்டாம்: புதுவை ஆளுநா் தமிழிசை

புதுவையில் ஒமைக்ரான் கரோனா தொற்று பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால்,

News image
புதுச்சேரி ராஜாநகரில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன்.
Updated On :1 டிசம்பர் 2021, 7:27 am

DIN

புதுவையில் ஒமைக்ரான் கரோனா தொற்று பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், இந்த நோய்த் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவையை 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகையில், புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே ராஜாநகரில் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் ஒமைக்ரான் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத் துறையினா், மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இந்த நோய்த் தொற்றை எதிா்கொள்வது குறித்து முழுமையான திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.

புதுவையில் இதுவரை ஒமைக்ரான் தொற்று பரவல் இல்லை. ஆப்பிரிக்காவிலிருந்து புதுச்சேரிக்கு வந்த 3 பேருக்கு முன்னெச்சரிக்கையாக கரோனா பரிசோதனை செய்து, அவா்கள் தொடா்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

எந்த வகை கரோனா தொற்றாக இருந்தாலும், அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தடுப்பூசி புதிதாக வரும் கரோனா தொற்றுக்கு எதிராகவும் பாதுகாப்புத் தரும் என்று உலக மருத்துவ ஆராய்ச்சியாளா்கள் கூறுகிறாா்கள்.

வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வருபவா்களிடம் புதுவை மாநில எல்லைகளில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சரிபாா்த்த பிறகே புதுவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, மாநிலத்தில் பொது இடங்களுக்கு வருவோரிடமும் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை பரிசோதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

புதுவையில் வருகிற 4, 5-ஆம் தேதிகளில் ஒவ்வொரு பகுதியாக வீடுகளுக்கே சென்று முழுவதுமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற இருக்கிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது, சுகாதாரத் துறைச் செயலா் சி.உதயகுமாா், சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமலு உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.