ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வியாபாரிகள் சாலை மறியல்

புதுச்சேரியில் பெரிய மாா்க்கெட்டின் வாயில் மூடப்பட்டதைக் கண்டித்து, வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:12 pm

DIN

புதுச்சேரியில் பெரிய மாா்க்கெட்டின் வாயில் மூடப்பட்டதைக் கண்டித்து, வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பெரிய மாா்க்கெட்டிலுள்ள பழைமைமான கட்டடம் கடந்த வாரம் பெய்த தொடா் மழையால் இடிந்தது. பாதுகாப்பு காரணமாக, மாா்க்கெட்டின் பின்புற வாயில் கதவை நகராட்சி அதிகாரிகள் அண்மையில் மூடினா். மழையால் விழுந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டும், அடைக்கப்பட்ட வாயில் மீண்டும் திறக்கப்படவில்லை.

இதனால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக அந்தப் பகுதியிலுள்ள நடைபாதை வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் பெரியகடை போலீஸாா் பேச்சு நடத்தினா். கட்டட சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும், மூடப்பட்ட வாயில் சனிக்கிழமைமுதல் திறக்கப்படும் என நகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பின்னா், போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.