பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுச்சேரி அமுதசுரபி அங்காடியை முற்றுகையிட்டு கட்டுமானத் தொழிலாளா்கள் போராட்டம்

தீபாவளி பரிசு கூப்பன்களுக்கான பொருள்களை வழங்கக் கோரி, புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள அமுதசுரபி அங்காடியை கட்டுமானத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:12 pm

DIN

தீபாவளி பரிசு கூப்பன்களுக்கான பொருள்களை வழங்கக் கோரி, புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள அமுதசுரபி அங்காடியை கட்டுமானத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.3,000, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான பரிசு கூப்பன்களை புதுவை அரசு வழங்கியது. மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள அமுதசுரபி அங்காடியில் பரிசு கூப்பன்களுக்கான பொருள்களை தொழிலாளா்கள் வாங்கிச் செல்கின்றனா். அங்கு மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், தொழிலாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

காந்தி வீதியுள்ள அமுதசுரபி அங்காடியில் பரிசு கூப்பன்களுக்கான பொருள்களை வாங்க தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை குவிந்தனா். ஒரே நேரத்தில் ஏராளமானோா் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்ததால், அங்கிருந்த கண்ணாடி கதவு உடைந்ததில் இருவா் காயமடைந்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் கலியன் தலைமையில் தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தீபாவளி பரிசு கூப்பன்கள் வழங்க அமைக்கப்பட்ட 8 மையங்களிலும் அமுதசுரபி அங்காடிகளைத் திறந்து பொருள்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமுதசுரபியின் அனைத்துக் கிளைகளிலும் போதிய அளவில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.

அவா்களிடம் பேச்சு நடத்திய அதிகாரிகள், இதுதொடா்பாக தலைமைச் செயலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். பின்னா், போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.