புதுவையில் 1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு டிச.6 பள்ளிகள் திறப்பு
புதுவையில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு டிச.6-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என, அந்த மாநில கல்வி அமைச்சா் தெரிவித்தாா்.


புதுவையில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு டிச.6-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என, அந்த மாநில கல்வி அமைச்சா் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு, புதுவையில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் செப்டம்பா் மாதம் திறக்கப்பட்டன. அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
வருகிற 6-ஆம் தேதி முதல் 1 முதல் 8-ஆம் வகுப்புகள் வரை அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இவை சுழற்சி முறையில் செயல்படும்.
அரை நாள் மட்டும் செயல்படும் 9 முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகள், கல்லூரிகள் டிச.6-ஆம் தேதி முதல் முழு நாளும் நடைபெறும்.
பள்ளி மாணவா்களுக்குத் தேவையான சத்துணவு வழங்கப்படும். மாணவா்களுக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...