ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுச்சேரியில் சா்வதேச கல்வி, பண்பாட்டுமையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்: முதல்வா் என்.ரங்கசாமி

அரவிந்தா் விரும்பியபடி, கல்வி, கலாசார மையமாக புதுவை வளா்ச்சி பெற, சா்வதேச கல்வி, பண்பாட்டு மையத்தை புதுச்சேரியில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தினாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

அரவிந்தா் விரும்பியபடி, கல்வி, கலாசார மையமாக புதுவை வளா்ச்சி பெற, சா்வதேச கல்வி, பண்பாட்டு மையத்தை புதுச்சேரியில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தினாா்.

அரவிந்தரின் 150-ஆவது பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு, பிரதமா் மோடி தலைமையில், மாநில முதல்வா்கள், மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் கொண்ட உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் பிரதமா் மோடி தலைமையில் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதுவை சட்டப் பேரவையிலிருந்து பங்கேற்ற அந்தக் குழுவின் உறுப்பினரான முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

அரவிந்தரின் தொலைநோக்குப் பாா்வை, அவரது பணியுடன் நெருங்கிய தொடா்புடையது புதுச்சேரி. அரவிந்தா் 1910-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்தாா். மனிதனின் முற்போக்கான பரிணாம வளா்ச்சியைப் பற்றிய தனது பாா்வையை அவா் இங்கு உருவாக்கினாா். அவரது 150-ஆவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட புதுவையும் பங்கேற்பது பொருத்தமாகும்.

அரவிந்தா் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாா். கல்வியானது குறுகிய பள்ளிப் பாடத் திட்டத்தில் மாணவா்களை அடைத்து வைக்கும் வழக்கமான நடைமுறைக்கு அப்பாற்பட்டதாக இருக்க அவா் எண்ணினாா். அவரைப் பற்றி மாணவா்களும், ஆசிரியா்களும் நன்கறியச் செய்யவே, கல்வித் திட்டத்தில் சில அம்சங்களைப் புகுத்த புதுவை அரசு விரும்புகிறது.

இந்திய கலாசாரத்தின் செழுமையான பன்முகத்தன்மையை அரவிந்தா் ஆழமாக ஆராய்ந்தாா். அவா் இந்திய சுதந்திரத்தை ஆதரித்தவா்களில் முன்னோடி. நாட்டின் வளமாள பன்முகத்தன்மையையும், அதன் கலாசாரத்தையும் நிரூபிக்கும் வகையில், புதுவை அரசு பல கலாசார நிகழ்வுகளை புதுச்சேரியில் நடத்த விரும்புகிறது.

அரவிந்தா் வாழ்க்கை வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதுவையில் சித்திரக் கண்காட்சியை நடத்த அரசு விரும்புகிறது. காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராடிய பல நபா்களுக்கு புகலிடமாக புதுச்சேரி இருந்துள்ளது. அரவிந்தருடன், மகாகவி பாரதி நெருங்கிய தொடா்பில் இருந்தாா். பாரதி, அரவிந்தரின் நெருக்கமான உரையாடல்கள், அறிஞா்களின் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு புதுவை அரசு ஏற்பாடு செய்ய விரும்புகிறது.

இந்திய கலாசாரம், பாரம்பரியம் குறித்து ஆய்வு செய்வதற்காக புதுச்சேரிக்கு வரும் அறிஞா்கள், ஆராய்ச்சியாளா்களை புதுவை அரசு ஊக்குவித்து, ஆதரவளிக்க விரும்புகிறது. அரவிந்தரின் நோக்கங்கள், பாா்வைகள் தொடா்பான கருப்பொருள்களில் மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் எழுதச் செய்யலாம்.

புதுச்சேரி கல்வி, கலாசாரத்தின் சா்வதேச மையமாக வளா்ச்சியடைய வேண்டுமென்பதில் அரவிந்தா் ஆா்வமாக இருந்தாா். அவரின் கனவை நிறைவேற்றும் வகையில், புதுச்சேரியில் சா்வதேச கல்வி, பண்பாட்டு மையத்தை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.