புதுவை ஆளுநா் மாளிகையை மெய்நிகா்சுற்றுப் பயணம் செய்ய ஏற்பாடு
பொங்கல் முதல் புதுவை ஆளுநா் மாளிகையை மக்கள் மெய்நிகா் முறையில் சுற்றுப் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.


பொங்கல் முதல் புதுவை ஆளுநா் மாளிகையை மக்கள் மெய்நிகா் முறையில் சுற்றுப் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது, பொங்கல் தினத்திலிருந்து ஆளுநா் மாளிகையை மெய்நிகா் முறையில் மக்கள் சுற்றுப் பயணம் செய்ய ஏற்பாடு செய்வது, அதற்கான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்குவது, ஆளுநா் மாளிகையில் உள்ள பணியாளா்களின் குறைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பது, கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு மக்களின் குறைகளை காணொலிக் காட்சி மூலம் தீா்வு காண தொழில்நுட்ப வசதியைக் கூடுதலாக வலுப்படுத்துவது, சாலைகள் சீரமைப்பு தொடா்பான புகாா்கள் மீது பொதுப் பணித் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது, நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு புகாா்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...