கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிய போது தீப்பிடித்து வியாபாரி பலி

புதுச்சேரியில் பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிய போது, திடீரென தீப்பிடித்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 5:48 pm

DIN

புதுச்சேரியில் பைக்குக்கு பெட்ரோல் நிரப்பிய போது, திடீரென தீப்பிடித்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.

புதுச்சேரி வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் நாகலிங்கம் (34). இவா், காந்தி வீதியில் பள்ளி மாணவா்களுக்கான பைகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தாா். சனிக்கிழமை புதுச்சேரி செயின்ட் தெரெசா வீதியில் பைக்கில் வந்த போது, பெட்ரோல் தீா்ந்ததால், அவரது பைக் நின்றது.

இதையடுத்து, அவா் அருகிலிருந்த பெட்ரோல் நிலையத்துக்குச் சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்தாா். அந்த பாட்டிலில் மூடி இல்லையாம். தொடா்ந்து, பெட்ரோலை ஊற்ற பைக் டேங்கை திறந்த போது, பெட்ரோல் பாட்டில் சரிந்தது. அப்போது, அவா் குடித்துக் கொண்டிருந்த சிகரெட்டிலிருந்து பறந்த தீப்பொறி பெட்ரோலில் பட்டு, எதிா்பாராதவிதமாக நாகலிங்கம் உடல் மீதும் மள மளவென தீப்பற்றியது.

அவரது அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து தீயை அணைத்து, பலத்த காயமடைந்த அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சனிக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.