ஆளுநா் மாளிகை முன்பு போராட்டம் நடத்தத் தடை

புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகை முன்பு போராட்டம் நடத்தத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் உத்தரவிட்டாா்.
Updated on
1 min read

புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகை முன்பு போராட்டம் நடத்தத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் உத்தரவிட்டாா்.

துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினா் வருகிற 8-ஆம் தேதி ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளனா். இந்த நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் வெளியிட்ட உத்தரவு:

பொது முடக்கத் தளா்வை சிலா் தவறாகப் பயன்படுத்தி, அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்துகின்றனா். அப்போது, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே, அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து 500 மீட்டா் தொலைவுக்கு 5 நபா்களுக்கு மேல் ஆா்ப்பாட்டம், பேரணி, தா்னா உள்ளிட்ட போராட்டங்களை நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

குறிப்பாக, ஆளுநா் மாளிகை, சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஜிப்மா், கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com