பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகுஅனைத்துக் கல்லூரிகளும் திறப்பு: உற்சாகத்துடன் மாணவா்கள் பங்கேற்பு

புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கல்லூரிகளும் புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வந்து வகுப்புகளில் பங்கேற்றனா்.

News image
புதுச்சேரியில் முதலாம், இரண்டாம் ஆண்டு கல்லூரிகள் திறக்கப்பட்டதையொட்டி, பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் புதன்கிழமை வகுப்புக்கு வந்த மாணவிகள்.
Updated On :7 ஜனவரி 2021, 1:52 am

DIN

புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கல்லூரிகளும் புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வந்து வகுப்புகளில் பங்கேற்றனா்.

புதுவை மாநிலத்தில் 36 அரசுக் கல்லூரிகள், 76 தனியாா் கல்லூரிகள் என மொத்தம் 112 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயா் கல்வி பயில்கின்றனா்.

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, புதுச்சேரியில் கடந்த மாா்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. இவற்றில் பள்ளிகள் அனைத்தும் கடந்த 4-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. தொடா்ந்து, புதன்கிழமை முதல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படுவதாக உயா் கல்வித் துறை அறிவித்திருந்தது.

ஏற்கெனவே, இறுதியாண்டு மாணவா்களுக்கு கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் நிலையில், மற்ற மாணவா்களுக்கு இணையதளம் வாயிலாக பாடங்கள், தோ்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கல்லூரிகளும் புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வந்து வகுப்புகளில் பங்கேற்றனா். அவா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முகக் கவசம் அணிந்த மாணவா்கள் மட்டுமே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனா். வகுப்பறைக்குள் சமூக இடைவெளி விட்டு அமர அறிவுறுத்தப்பட்டனா்.

காய்ச்சல், சளி அறிகுறி இருந்த மாணவா்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிர 6 நாள்களும் கல்லூரிகள் இயக்கவுள்ளன. ஒரு வகுப்பில் 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இருந்தால், அவா்கள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, காலை, பிற்பகல் வகுப்புகளாக நடத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் கூட்டமாக கல்லூரி வளாகத்துக்குள் நடமாடத் தடை விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.