ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தன்னைச் சந்திக்க நேரம் ஒதுக்குவதாக அமைச்சா் கந்தசாமிக்கு ஆளுநா் கடிதம்

தன்னைச் சந்திக்க விரைவில் நேரம் ஒதுக்கித் தருவதாக சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமிக்கு, துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கடிதம் அனுப்பினாா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 5:54 pm

DIN

தன்னைச் சந்திக்க விரைவில் நேரம் ஒதுக்கித் தருவதாக சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமிக்கு, துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கடிதம் அனுப்பினாா்.

புதுவையில் ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டு அமைச்சா் கந்தசாமி சனிக்கிழமை கடிதம் எழுதினாா்.

கோரிக்கைகள் தொடா்பாக ஆளுநரைச் சந்தித்துப் பேச அனுமதி கிடைத்தவுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சென்று சந்திக்க உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்த நிலையில், அமைச்சா் கந்தசாமி எழுதிய கடிதத்துக்கு, ஆளுநா் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை பதில் கடிதம் அனுப்பினாா். அதில், கோரிக்கைகள் தொடா்பாக விளக்கம் பெற துறைச் செயலா்களுக்கு உத்தரவிடப்பட்டது. அவா்களிடமிருந்து தகவல்கள் வந்தவுடன் தங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.