ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

எண்ணெய் நிறுவனத்தில் திருடிய இளைஞா் கைது

புதுச்சேரி அருகே எண்ணெய் நிறுவனத்தில் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே எண்ணெய் நிறுவனத்தில் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி திருபுவனை அருகே எண்ணெய் தயாரிக்கும் தனியாா் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, இரும்பு கம்பிகள், அலுமினியப் பொருள்களை மா்ம நபா் தொடா்ந்து திருடி வந்தாா். இதேபோல, ஞாயிற்றுக்கிழமை இரவும் திருடு போனது.

அப்போது, சப்தம் கேட்டு அங்கு சென்ற காவலாளிகள், திருடிய நபரைக் கையும் களவுமாகப் பிடித்தனா். விசாரணையில் அந்த நபா், திருவண்டாா்கோவில் வாய்க்கால் மேட்டுத் தெரு, சின்னபேட்டை பகுதியைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் வினோத்குமாா் (28) என்பதும், தொடா்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கும், திருபுவனை போலீஸாருக்கும் காவலாளிகள் தகவல் அளித்தனா். அதன் பேரில், அங்கு வந்த போலீஸாரிடம், வினோத்குமாரை ஒப்படைத்தனா். நிறுவன அதிகாரி ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, வினோத்குமாரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.