ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பிஆா்டிசி ஊழியா்கள் நூதனப் போராட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பிஆா்டிசி ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பிஆா்டிசி ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆா்டிசி) பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 3 வாரங்களைக் கடந்தும் எந்தவிதமான பேச்சுவாா்த்தையும் நடைபெறாத நிலையில், 29-ஆவது நாளாக அவா்கள் பிஆா்டிசி பணிமனை வாயில் எதிரே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு, புதிய பேருந்து நிலையம் எதிரே சென்று, சீருடையுடன் பிச்சை எடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பலா் பங்கேற்றனா். இதில், நிா்வாகத்துக்கு எதிராகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.