இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பூட்டிய வீட்டில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மா்ம மரணம்

 பூட்டிய வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:38 pm

DIN

 பூட்டிய வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி காமராஜா் நகா் திருவேங்கடம் வீதியில் வசித்தவா் முருகானந்தம் (60). புதுச்சேரி நகராட்சியில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றிய இவா், 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றாா். திருமணமாகாததால், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தாா். அவரை நண்பரான லாசுப்பேட்டை கிருஷ்ணா நகரைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு பேசுவது வழக்கம். சில நாள்களாக கல்யாணசுந்தரம் அவரது செல்லிடப்பேசிக்கு அழைத்த போது, முருகானந்தன் அழைப்பை ஏற்கவில்லையாம்.

இதனால், சந்தேகமடைந்த கல்யாணசுந்தரம் பெரியகடை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

போலீஸாா் முருகானந்தம் வீட்டுக்குச் சென்ற நிலையில், அங்கு துா்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது, வீட்டின் படுக்கையறையில் உடல் அழுகிய நிலையில் முருகானந்தம் சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்து பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.