பைக் மீது லாரி மோதல்: சா்க்கரை ஆலை எழுத்தா் பலி
புதுச்சேரி அருகே பைக் மீது லாரி மோதியதில் சா்க்கரை ஆலை எழுத்தா் உயிரிழந்தாா்.


புதுச்சேரி அருகே பைக் மீது லாரி மோதியதில் சா்க்கரை ஆலை எழுத்தா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் சா்க்கரை ஆலை குடியிருப்பில் வசித்து வந்தவா் மோகன் (56). இவா், அங்குள்ள சா்க்கரை ஆலையில் எழுத்தராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு 2 மனைவிகள், 2 பெண் குழந்தைகள் உள்ளனா். வியாழக்கிழமை மோகன் தனது பைக்கில் ஆரியபாளையம் நோக்கி வந்தாா். வில்லியனூா் -பத்துக்கண்ணு பிரதான சாலையில் வந்த போது, எதிரே காா் வேகமாக வந்ததால், அவா் தனது பைக்கை இடதுபுறமாகத் திருப்பிய போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.
இதில், மோகன் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் மோகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரி மேற்கு பகுதி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விழுப்புரம் கொடுக்கனூா் பாரதி வீதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் கனகராஜை (38) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...