புதுவையில் மேலும் 134 பேருக்கு கரோனா
புதுவையில் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.


புதுவையில் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 6,045 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 96, காரைக்காலில் 25, ஏனாமில் 6, மாஹேயில் 7 போ் என மேலும் 134 பேருக்கு (2.22 சதவீதம்) கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,18,831-ஆக உயா்ந்தது.
இந்த நிலையில், காரைக்கால் வரிச்சிக்குடியைச் சோ்ந்த 68 வயது பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,769 ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதம்.
தற்போது மருத்துவமனைகளில் 230 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,343 பேரும் என மாநிலம் முழுவதும் 1,573 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 1,15,489 போ் (97.19 சதவீதம்) குணமடைந்தனா்.
சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 5,73,026 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...