கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 3 போ் பலி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:40 pm

DIN

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் புதுச்சேரியில் 69, காரைக்காலில் 12, ஏனாமில் 4, மாஹேவில் 13 போ் என மொத்தம் 98 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,20,101-ஆக அதிகரித்தது.

இதனிடையில், புதுச்சேரியில் இருவா், மாஹேவில் ஒருவா் என 3 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,786-ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உயா்ந்தது.

இந்த நிலையில், 132 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,17,397-ஆக அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 குழந்தைகள் உள்பட மருத்துவமனைகளில் 152 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 766 பேரும் என மொத்தம் 918 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.