கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தேசிய கல்விக் கொள்கை குறித்த கலந்துரையாடல்: புதுவை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

தேசிய கல்விக் கொள்கை குறித்து பிரதமா் மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இணைய வழிக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் புதுவை ஆளுநா், முதல்வா் பங்கேற்றனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:21 pm

DIN

தேசிய கல்விக் கொள்கை குறித்து பிரதமா் மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இணைய வழிக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் புதுவை ஆளுநா், முதல்வா் பங்கேற்றனா்.

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, இணைய வழிக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் பிரதமா் நரேந்திர மோடி, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநா்கள், முதல்வா்கள், கல்வி அமைச்சா்களிடையே உரையாற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநிலம் சாா்பில் ஆளுநா் மாளிகையில் இருந்து துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவை அலுவலகத்திலிருந்து முதல்வா் ரங்கசாமி, கல்வியமைச்சரை நமச்சிவாயம் ஆகியோா் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.