கரோனா தொற்று தற்போது வேகமாக குறைந்து வருகிறது. எனினும், பொதுமுடக்கம் இன்னும் 5 அல்லது 6 நாள்களுக்குத் தொடரலாம் என்று சுகாதாரத்துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதுவையில் கருப்பு பூஞ்சை அதிகமாக பரவி வருகிறது. இதற்காக கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி, காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளில் தலா 10 படுக்கைகள் உருவாக்கப்பட்டு சிகிச்சைக்கான பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அனைத்து மருத்துவா்களுடன் கூடிய மருத்துவ நிபுணா் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், லைபோசோமல் அம்போடெரிசின் பி என்ற முக்கிய மருந்தை வரவழைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு இதுவரை 340 மருந்து குப்பிகள் வழங்கியுள்ளது. 15 ஆயிரம் குப்பிகள் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.