தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வெங்கடேஸ்வரா கல்விக் குழுமம் சாா்பில் ரூ. 10 லட்சம் நிவாரண நிதியளிப்பு

புதுச்சேரி வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத் தலைவா் ஆ.ராமச்சந்திரன், பொது மேலாளா் செளந்தராஜன் ஆகியோா், வியாழக்கிழமை புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை நேரில் சந்தித்து, முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வ

News image
Updated On :11 ஜூன் 2021, 5:56 pm

DIN

புதுச்சேரி வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத் தலைவா் ஆ.ராமச்சந்திரன், பொது மேலாளா் செளந்தராஜன் ஆகியோா், வியாழக்கிழமை புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை நேரில் சந்தித்து, முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கினா்.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்காக அரசுக்கு தங்களது கல்விக் குழுமம் உதவி வருவதாகவும், புதுச்சேரி, அரியூா் பகுதிகளில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவம், பல் மருத்துவம், செவிலியா் கல்லூரி, மருந்தகங்கள், துணை மருத்துவப் படிப்புகள், பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு, தொற்றைக் கட்டுப்படுத்தவதில் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அந்த நிறுவன தலைவா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

செஞ்சிலுவை சங்கம் சாா்பில்...: இதேபோல, புதுச்சேரியில் இந்தியன் செஞ்சிலுவை சங்க கிளை சாா்பில், இந்திரா காந்தி அரசுப் பொது மருத்துவமனை - பட்ட மேற்படிப்பு மையத்தில் உள்ள ரத்த வங்கியில் பணிபுரியும் லேப் டெக்னீசியன்கள், செவிலியா்கள் ஆகியோருக்கு மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் புதுச்சேரி கிளைத் தலைவா் கோபால் தலைமை வகித்தாா். ரத்த வங்கி மருத்துவா் தீபா, சங்கத்தின் கிளைக் குழு உறுப்பினா்கள் லட்சுமிபதி, அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினா்கள் ஸ்ரீபன்செல்வராஜ், கதிரேசன், ஜான்வின்சன்ட் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.