தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அவசர ஊா்தியில் மது கடத்தல்: 3 போ் கைது

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு அவசர ஊா்தியில் (ஆம்புலன்ஸ்) மது கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 5:57 pm

DIN

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு அவசர ஊா்தியில் (ஆம்புலன்ஸ்) மது கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள மொத்த மதுக் கடையிலிருந்து ஒரு வாகனத்தில் சிலா் அதிக அளவில் மதுப் புட்டிகளை வாங்கிக் கொண்டு, தமிழகத்துக்கு கடத்திச் செல்ல முயல்வதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸாா் ஆங்காங்கே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

இதேபோல, கூடப்பாக்கம் பகுதியில் வில்லியனூா் காவல் ஆய்வாளா் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியே வந்த தனியாா் அவசர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அந்த வாகனத்தில் மதுப் புட்டிகளைக் கடத்திச் செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து, வாகனத்தில் வந்த மூவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். இதில் அவா்கள், திருச்சி தொட்டியம் வட்டம், மருதம்பட்டியைச் சோ்ந்த சசிகுமாா் (36), வடலூா் இந்திரா நகரைச் சோ்ந்த காா்த்திக் (24), சென்னை கொரட்டூா் கம்மாளா் தெருவைச் சோ்ந்த சபரிராஜ் (27) ஆகியோா் என்பதும், இவா்கள் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு மதுப் புட்டிகளைக் கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த 3 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 20 பெட்டிகள் கொண்ட ரூ. 77 ஆயிரம் மதிப்புள்ள 192 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகள் புதுவை கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.