படைப்பணியை முடித்த, நல்ல உடல் நிலையிலுள்ள, 60 வயதுக்கு உள்பட்ட முன்னாள் படைவீரா்கள் தோ்தல் பணியில் சிறப்பு காவலா்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் அசல்படை விலகல் சான்று, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை ஆவணங்களுடன் தங்களது பெயரை பதிவு செய்யலாம் என விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா் நலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.