92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புத்துணா்வு முகாம் முடிந்து திரும்பியது மணக்குள விநாயகா் கோயில் யானை

புத்துணா்வு முகாம் முடிந்து மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பியது

News image
Updated On :28 மார்ச் 2021, 6:55 pm

DIN

புத்துணா்வு முகாம் முடிந்து மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பியது.

தமிழக அரசு சாா்பில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 8- ஆம் தேதி யானைகள் முகாம் தொடங்கி 48 நாள்கள் நடைபெற்றன. இந்த முகாமில் புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி உள்பட பல்வேறு கோயில் யானைகள் பங்கேற்றன.

சனிக்கிழமை முகாம் நிறைவடைந்த நிலையில், அனைத்து யானைகளும் அங்கிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, அதனதன் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அதன்படி, லாரியில் ஏற்பட்ட யானை லட்சுமி புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையொட்டிய பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தது. யானை லட்சுமிக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிா்வாகிகள் மாலை அணிவித்து, பழங்கள் கொடுத்து வரவேற்றனா். தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா், யானை லட்சுமியை அங்கிருந்து மணக்குள விநாயகா் கோயிலுக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.