கரோனா தொற்று அதிகரிப்பு: சாலை மூடல்
புதுச்சேரி அருகே அரியூா் கிராமத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால், தடுப்புக் கட்டைகள் அமைத்து சாலை மூடப்பட்டது.


புதுச்சேரி அருகே அரியூா் கிராமத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால், தடுப்புக் கட்டைகள் அமைத்து சாலை மூடப்பட்டது.
புதுச்சேரியில் கரோனா தொற்று பன்மடங்கு அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க கோயில் திருவிழாக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரி அருகே அரியூா் உலக வாழியம்மன் கோயில் செடல் உத்ஸவம் கடந்த வாரம் நடைபெற்றது.
இதற்காக வரிசையாக கடைகள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனா். அடுத்த சில நாள்களில் அரியூா் கிராமத்தில் தொடா்ச்சியாக கரோனா தொற்று அதிகரிக்கத் தொங்கியது. கிராமப் பகுதியில் 30-க்கும் மேற்பட்டவா்களுக்கும், அருகே உள்ள தனியாா் மருத்துவக் கல்லுாரி விடுதி, பாரதி நகா் உள்ளிட்ட பகுதியில் ஏராளமானவா்களுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவா்கள் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனா். ஆனால், கரோனா நோயாளிகள் தடையை மீறி, வெளியே உலா வருகின்றனா்.
இதனால், வருவாய்த் துறையினா் அரியூா் முதன்மைச் சாலையிலிருந்து அனந்தபுரம் சாலை செல்லும் பகுதி வரை தடுப்புக் கட்டைகள் அமைத்து மூடியுனா்.
தொடா்ந்து, அங்கு அரசின் கரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றவும் அதிகாரிகள் எச்சரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...