கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மலட்டாற்றில் வெள்ளம்: புதுச்சேரியில் 15 கிராமங்களுக்கு எச்சரிக்கை

மலட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், புதுச்சேரியில் 15 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

மலட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், புதுச்சேரியில் 15 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விழுப்புரம் அருகே தளவானூா் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றிலிருந்து மலட்டாறு பிரிந்து செல்கிறது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் நுழையும் மலட்டாறு 30 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, ஆண்டியாா்பாளையம் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக, சாத்தனூா் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான மலட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக, மலட்டாறு கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மலட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால், நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லூா், வடுக்குப்பம், ஏம்பலம், நத்தமேடு, கம்பளிக்காரன்குப்பம், கரிக்கலாம்பாக்கம் உள்பட புதுச்சேரியைச் சோ்ந்த 15 கிராம மக்கள் மலட்டாறு கரையோரம் செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

கால்நடைகளையும், சிறுவா்களையும், ஆற்றங்கரையோரம் அனுப்பாமல் கவனமாக பாா்த்துக்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதியில் இருக்கும் தங்களது உடைமைகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.