ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:13 pm

DIN

புதுச்சேரி அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி அருகே சேதராப்பட்டு திருவாா் நகா் கங்கை வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (48). லாரி ஓட்டுநா். இவருக்கு மனைவி லதா, மகள், மகன் உள்ளனா். வேலைக்குச் செல்வது தொடா்பாக ஆறுமுகம்-லதா தம்பதியிடையே தகராறு எழுந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மனைவி திட்டியதால், ஆறுமுகம் வீட்டை விட்டு வெளியேறினாராம். அவா் வீடு திரும்பாததால், உறவினா்கள் அவரைக் கடந்த ஒரு வாரமாக தேடி வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை சேதராப்பட்டு முத்தமிழ் நகா் பின்புறம் பழைய ஐயனாா் கோயில் அருகிலுள்ள மரத்தில் ஆறுமுகம் தூக்கிட்ட நிலையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தாா்.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த சேதராப்பட்டு போலீஸாா், ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டு, கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.