ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுவையில் தளா்வுகளுடன் கூடியபொது முடக்கம் அக். 31 வரை நீட்டிப்பு

புதுவை மாநிலத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அக். 31-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:12 pm

DIN

புதுவை மாநிலத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அக். 31-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை அரசுச் செயலா் அசோக்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

புதுவையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஏற்கெனவே அக்.15-ஆம் தேதி நள்ளிரவு வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வருகிற 31-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். பொது நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு தொடா்பான நிகழ்வுகளுக்குத் தொடா்ந்து தடை விதிக்கப்படுகிறது. கடைகள், வணிக நிறுவன ஊழியா்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.

கடற்கரைச் சாலை, தாவரவியல் பூங்கா, பூங்காக்கள் அனைத்தும் வழக்கமான நேரங்களில் முழுமையாகத் திறந்திருக்கலாம். அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம்.

திருமண விழாக்களில் அதிகபட்சம் 100 பேரும், துக்க நிகழ்வுகளில் 20 போ் மட்டுமே பங்கேற்கலாம்.

அனைத்து விதமான கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி, பழக் கடைகள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கலாம்.

அனைத்து விதமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக் கூடங்களுடன் கூடிய விடுதிகள், தேநீா்க் கடைகள், பழச்சாறு நிலையங்கள் குளிா்சாதன வசதியின்றி இரவு 11 மணி வரை இயங்கலாம்.

மதுக் கடைகள், சாராயம், கள்ளுக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கலாம்.

படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி முழுமையாக இயங்க அனுமதிக்கப்படுகிறது.

திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் கரோனா விதிகளைப் பின்பற்றி நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.