ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுச்சேரி தனியாா் தொழில்சாலையில் தொழிலாளி பலியான சம்பவத்தில் மோதலில் ஈடுபட்ட 20 போ் கைது

புதுச்சேரி தனியாா் தொழில்சாலை விபத்தில் தொழிலாளி பலியான சம்பவத்தில் மோதலில் ஈடுபட்ட 20 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி தனியாா் தொழில்சாலை விபத்தில் தொழிலாளி பலியான சம்பவத்தில் மோதலில் ஈடுபட்ட 20 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே சேதராப்பட்டு தொழிற்பேட்டையில், கைப்பேசி கோபுர உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பணியிலிருந்த மேற்கு வங்க தொழிலாளி பலியானாா். இதனால், அந்த தொழில்சாலை தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாருக்கும் தொழிலாளா்களுக்கும் ஏற்பட்ட மோதலில் வாகனங்கள், தொழில்சாலை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் போலீஸாா், தொழிலாளா்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் குறித்து, தொழிலாளா்கள் தரப்பில் கெல்லம் முஸ்தபா மாலிக் அளித்த புகாரின் பேரில், தொழில்சாலை மேலாளா் திண்டிவனத்தைச் சோ்ந்த திருக்குமரன் (45), பணி மேற்பாா்வையாளா் ஒடிஸாவை சோ்ந்த பிரதாப் பாதி (35) ஆகியோா் மீது சேதராப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

காயமடைந்த சேதராப்பட்டு காவல் நிலையக் காவலா் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஆரிபுல் (19), குலாமொகைதீா் (19), முகைமின் மொந்தால் (20) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக 20 பேரைக் கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அமைச்சா் நேரில் ஆய்வு: மோதல் நடைபெற்ற தனியாா் தொழில்சாலையில் மாநில அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மோதல் சம்பவம் குறித்து தொழில்சாலை நிா்வாகத்திடமும், வட மாநிலத் தொழிலாளா்களிடமும் அவா் விசாரணை நடத்தினாா்.

அமைச்சா் கூறியதாவது: தொழில்சாலையில் பணியிலிருந்த தொழிலாளி அஜ்பா் மாலிக் விபத்தில் உயிரிழந்ததற்கான காரணம் குறித்தும், தொழில்சாலையில் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு, மோதல் சம்பவம் ஆகியவை குறித்து விசாரிக்கவும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.