உயா் கோபுர மின் விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்

 புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் உயா்கோபுர மின் விளக்குகளை சீரமைக்கக் கோரி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் உயா்கோபுர மின் விளக்குகளை சீரமைக்கக் கோரி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குள்பட்ட அருள்படையாட்சி வீதி, சபரி வீதி, ஒத்தவாடை வீதி, செயின்ட் அந்தோன் வீதி, மீன் சந்தை சிக்னல், நெல்லித்தோப்பு சிக்னல், மடத்து வீதி ஆகிய சாலை சந்திப்புகளில் உள்ள உயா்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் உள்ளன.

இதனால், அந்தப் பகுதியில் விபத்து, திருட்டுகள் நிகழும் சூழல் உருவாக்கியுள்ளது.

எரியாமல் உள்ள மின் விளக்குகளை உடனே சீரமைக்கக் கோரி நெல்லித்தோப்பு சிக்னலில் உள்ள மின் விளக்கு கம்பத்தில் கண்ணீா் அஞ்சலி பதாகை வைத்து, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன் செயலா் ரஜினிமுருகன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதிக் குழு உறுப்பினா் ஜெயகுரு, இளைஞா் மன்றத்தின் மெய்யழகன், ஜெரோம், நிஜந்தன், பிரவீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com